யாழ்ப்பாணத்தில் ரெலோவின் மறைந்த தலைவர் சிறி சபாரத்தினத்தின் 37வது நினைவேந்தல்

தமிழ் ஈழ விடுதலை இயக்கமான ரெலோ அமைப்பின் முன்னாள் தலைவர் சிறி சபாரத்தினத்தின் 37ஆவது நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணம், கோண்டாவில் அன்னங்கை பகுதியில் இன்று இடம்பெற்றது.

இதன்போது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு சிறி சபாரத்தினத்தின் உருவப்படத்திற்கு மலர் மாலைகள் அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நினைவேந்தலில் ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரம் எம்.பி. ரெலோவின் பேச்சாளர் கு.சுரேந்திரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான சபா.குகதாஸ், விந்தன் கனகரட்ணம், பிரசன்னா இந்திரகுமார் வலிகிழக்கு முன்னாள் தவிசாளர் தி.நிரோஷ் உள்ளிட்ட ரெலோவின் உறுப்பினர்கள், மூத்த போராளிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.