மன்னாரில் ரெலோவின் மறைந்த தலைவர் சிறி சபாரத்தினத்தின் 37வது நினைவேந்தல்

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் சிறி சபாரத்தினத்தின் 37வது ஆண்டு நினைவு தினம் இன்று (6) மன்னாரில் அனுஷ்டிக்கப்பட்டது.

மன்னாரில் உள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) காரியாலயத்தில் இயக்கத்தின் மாவட்ட அமைப்பாளர் ஏ.ரி.மோகன் ராஜ் தலைமையில் இந்த நினைவஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) கட்சியின் முக்கிய உறுப்பினர்கள், ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ், கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது தலைவர் சிறி சபாரத்தினம் மற்றும் உயிர் நீத்த போராளிகள், பொது மக்களை நினைவுகூர்ந்து சுடர் ஏற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து நினைவுப் பேருரையும் இடம்பெற்றது.