இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த 16 தமிழக மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்துக் கொண்டிருந்த 16 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இன்று அதிகாலை நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் வந்து, தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளை பயன்படுத்தி மீன்பிடித்து, கடல்வளங்களை நாசப்படுத்திய 16 பேரே கைதாகினர்.

புதுக்கோட்டை, நாகப்பட்டினங்களை சேர்ந்த மீனவர்கள், 2 படகுகளுடன் கைது செய்யப்பட்டனர்.