அமரர் ராஜமகேந்திரன் அவர்களுடைய இழப்பிற்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்

கப்பிட்டல் மஹாராஜா குழுமத்தின் தலைவரும் சக்தி மற்றும் சிரச ஊடகங்களின் நிர்வாக இயக்குனரும் ஆகிய ராஜமகேந்திரன் அவர்கள் அமரத்துவம் எய்திய செய்தி கேட்டு அதிர்ச்சியும் பெரும் துக்கமும் அடைந்தோம்.

துணிச்சல் மிக்கவராக இந்த நாட்டிற்கும் மக்களுக்கும் இழைக்கப்படும் அனைத்து தவறான செயற்பாடுகளையும் அஞ்சாது வெளிக் கொண்டுவருவதோடு, விமர்சனங்கள முன்வைத்து மக்களை தெளிவுபடுத்தி, தவறுகளை திருத்த எந்த சவால்களுக்கும் முகம் கொடுத்தவர். தன்னை சார்ந்தவர்களை சரியான முறையில் வழி நடத்தியவர்.

சைவத்தையும் தமிழையும் வளர்ப்பதற்கு தன்னாலான அனைத்து முயற்சிகளையும் எடுத்ததோடு பாரிய உதவிகளையும் புரிந்து வந்தவர். நாட்டில் மக்கள் முகம் கொடுக்கும் அனைத்து அனர்த்தங்களுக்கு முன்னின்று தன்னுடைய குழுமத்தின் ஊடாக பாரிய உதவிகளை ஒழுங்கமைத்து மக்களுக்கு சென்றடைய வழி செய்தவர்.

துணிச்சலும் செயலாற்றலும் ஒருங்கே கொண்ட தலைவனாக தனது நாட்டிற்கும் மக்களுக்கும் மொழிக்கும், மதத்திற்கும் அயராது தொண்டாற்றிய ஆத்மா இன்று மௌனித்து இருக்கிறது. அவரது மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

அன்னாரது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம். அவர் இழப்பால் துயருறும் குடும்பத்தினருக்கும் அவரது குழும நிர்வாகிகள் மற்றும் உத்தியோகத்தர்களும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

சுரேந்திரன்
ஊடகப் பேச்சாளர்- ரெலோ
தமிழ் தேசியக் கூட்டமைப்பு