அரசாங்கத்தின் புதிய நல்லிணக்க முயற்சிகளுக்கு வெற்றியளிக்குமா என பிரித்தானிய தூதுவர் சந்தேகம்

அரசாங்கத்தின் புதிய நல்லிணக்க முயற்சிகள் பலனளிக்குமா என சமூகத்தில் சந்தேகம் காணப்படுவதாக தெரிவித்துள்ள இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் அன்றூ பட்ரிக்; அரசாங்கத்தின் இந்த முயற்சிகளிற்கு இன்னமும் பரந்துபட்ட ஆதரவு கிடைக்கவில்லை என்பதை உணரமுடிகின்றது. எனவும் தெரிவித்துள்ளார்

டெய்லி மிரருக்கான பேட்டியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சிலவேளைகளில் ஜெனீவா தீர்மானம் சமர்ப்பிக்கப்படும் விதம் குறித்து நான் சிறியளவு கரிசனைகொண்டுள்ளேன்,சர்வதேச சமூகம் இலங்கை விடயங்களில் தலையிடுகின்றதா என்ற கேள்வி தனக்கு எழுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

கேள்வி ; சமீபகாலங்களில் இரண்டு நாடுகளும் பரஸ்பரம் ஈடுபாட்டை அதிகரித்துள்ளதை காண்கின்றோம்-இரு நாடுகளிற்கும் இடையிலான இருதரப்பு உறவின் புதிய திசை எது?

பதில் ; எனக்கு இரு தரப்பு உறவில் புதிய திசை குறித்து எதுவும் தெரியாது, எனினும் எங்கள் இரு நாடுகளிற்கும் இடையில் நீண்டகாலமாக வலுவான பிணைப்பு காணப்பட்டது இது 75வருட கால இராஜதந்திர உறவுகளை சமீபத்தில் கொண்டாடுவதற்கு காரணமாக அமைந்தது.

ஐக்கிய இராச்சியத்தில் வாழும் கல்விகற்கும் இலங்கையர்கள் மத்தியில் பல தொடர்புகள் இருக்கலாம்,இது புரிய திசை தொடர்பானதல்ல மாறாக கொவிட்டும் பொருளாதார நெருக்கடிகளும் எங்கள் உறவுகள் எவ்வளவு முக்கியமானவை என்பதை உணரச்செய்துள்ளன.

இந்த நெருக்கடிகளில் இருந்து இலங்கை மீள்வதற்கு பிரிட்டன் பெரும் பங்களிப்பை வழங்கியது.

இது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளேன் ஆகவே இது உறவுகளை வலுப்படுத்துதல் தொடர்பானது தவிர புதிய திசை குறித்தது அல்ல.

கேள்வி ; இரு தரப்பு உறவுகள் குறித்து வரும் இலங்கையர்கள் ஜெனீவா செயற்பாடுகள் குறித்து அதிகம் பேசுகின்றனர் – ஜெனீவா தீர்மானத்திற்கு இணை அனுசரனை வழங்கிய நாடுகளில் பிரிட்டனும் ஒன்று இலங்கை நல்லிணக்கத்திற்கான சொந்த முயற்சிகளில் ஈடுபடும் அதேவேளை சர்வதேச தலையீடுகள் குறித்து அதிருப்தி வெளியிட்டு வந்துள்ளது- நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக இலங்கை எடுத்துள்ள சமீபத்தைய நடவடிக்கைகளை பிரிட்டன் ஏற்றுக்கொள்கின்றதா?

பதில் ; நாங்கள் இணை அனுசரணை நாடுகளின் ஒரு பகுதி என்பது உண்மை, இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு அமெரிக்கா கனடா மலாவி ஆகிய உட்படபல நாடுகள் தலைமை வகிக்கின்றன .

சிலவேளைகளில்இந்த தீர்மானம் சமர்ப்பிக்கப்படும் விதம் குறித்து நான் சிறியளவு கரிசனைகொண்டுள்ளேன்,சர்வதேச சமூகம் இலங்கை விடயங்களில் தலையிடுகின்றதா என ?

மனித உரிமை நிபுணர்கள் செயற்பாட்டாளர்களிடம் நீங்கள் பேசினால் அவர்கள் சீர்திருத்தங்கள் மற்றும் யுத்தத்தின் பாராம்பரியத்திற்கு தீர்வை காண்பதற்கான விடயங்களில் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் பங்களிப்பில் அவர்கள் ஆர்வமாக உள்ளனர்.

இலங்கை மீது தனது கருத்துக்களை திணிப்பது சர்வதேச சமூகம் இல்லை.

கடந்த செப்டம்பர் மாதம் ஜெனீவாவில் வெளியான அறிக்கையை வாசித்துபார்த்தால் அது அரசாங்கம் முன்னேற்றம் காண்கின்றது என்பதை ஏற்றுக்கொள்கின்றது அதேவேளை இன்னமும் பல நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டி உள்ளதை வலியுறுத்துகின்றது.

நான் மற்றுமொரு விடயத்தை தெரிவிக்க விரும்புகின்றேன் இருதரப்பு உறவுகளில் மனித உரிமைகள் மிகவும் முக்கியமான விடயம்.ஆனால் அது மாத்திரம் இருதரப்பு உறவுகளுக்கான விடயமல்ல. இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு பிரிட்டன் வழங்கிய பங்களிப்பு குறித்து நான் முன்னர் தெரிவித்தேன்.இந்த நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்காக பிரிட்டன் இலங்கையுடன் நெருக்கமாக இணைந்து செயற்படுகின்றது.

இருதரப்பு உறவுகளில் கருத்துவேறுபாடுகள் எழக்கூடும்.

ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் தீர்மானம் குறித்து கருத்துடன்பாடு ஏற்பட்டதும் நாங்கள் 2019க்கு முன்னர் காணப்பட்ட நிலைமைக்கு திரும்பலாம் என நான் கருதுகின்றேன்.

கேள்வி ; உண்மை நல்லிணக்கம் ஆணைக்குழுவை ஏற்படுத்துவது தொடர்பில் இலங்கை சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது- இது குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில் ; இலங்கை எடுத்துள்ள ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை நாங்கள் வரவேற்றுள்ளோம்.

நான் இலங்கைக்கு வந்து ஆறு மாதங்களே ஆகின்றன ஆகவே இது எனக்கு புதிய விடயம்.

இலங்கையில் பல வருடங்களாக மனித உரிமைகள் விடயங்களில் பணியாற்றிய மனித உரிமை நிபுணர்களுடன் நீங்கள் பேசினால் அவர்கள் இலங்கை அரசாங்கத்திற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அனுப்பிய கடிதங்கள் என்பவற்றை வைத்து பார்த்தல் இந்த விடயம் குறித்து போதியளவு கலந்தாலோசனைகள் இடம்பெறவில்லை என்ற கரிசனை காணப்படுவது புலனாகின்றது.

இந்த விடயங்கள் குறித்து கடந்தகாலங்களில் ஆராய்ந்த குழுக்கள் உள்ளன என தெரிவிக்கும் அவர்கள் இந்த குழுக்களின் அறிக்கைகள் வெளியாகவில்லை பகிரங்கப்படுத்தப்படவி;லலை நடைமுறைப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கின்றனர்.

அரசாங்கத்தின் இந்த முயற்சிகள் பலனளிக்குமா என சமூகத்தில் சந்தேகம் காணப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர் இந்த விடயத்திற்கு புதியவன் என்ற அடிப்படையில் நான்இதனை இவ்வாறோ உணர்ந்துகொள்கின்றேன்.

அரசாங்கத்தின் முயற்சிகளை நான் வரவேற்கும் அதேவேளை பரந்துபட்ட மக்கள் மத்தியில் நான் மேற்கொண்ட கலந்துரையாடல்கள் மூலம் அரசாங்கத்தின் இந்த முயற்சிகளிற்கு இன்னமும் பரந்துபட்ட ஆதரவு கிடைக்கவில்லை என்பதை உணரமுடிகின்றது.

கேள்வி ; இலங்கைக்கு நீங்கள் வந்து ஆறுமாதங்களாகின்றது – நிலைமை எவ்வாறானதாக காணப்படுகின்றது?

பதில் ; இலங்;கையில் எனது குறுகியகாலத்தின் போது நான் கருத்துபரிமாற்றத்தில் ஈடுபட்டவர்களின் கருத்தினையே நான் வெளிப்படுத்துகின்றேன் இலங்கை அரசாங்கம்முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளை வரவேற்பவர்கள் உள்ளனர் அதேவேளை பல விடயங்களிற்கு இன்னமும் தீர்வு காணப்படவேண்டியுள்ளது.

யுத்தத்தின் பாரம்பரியம் குறித்த விடயங்களிற்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை.

பயங்கரவாத தடைச்சட்டம்குறித்த கரிசனைகள் காணப்படுகின்றன -நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் குறித்து சர்வதேச சமூகம் பல கரிசனைகளை கொண்டுள்ளது.

கேள்வி ; அரசாங்கம் சர்வதேச சமூகத்தின் கரிசனைகளை உள்வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது – சட்டமூலத்தின் புதிய வடிவம் குறித்த உங்கள் கருத்து என்ன?

பதில் ; உயர் நீதிமன்றம் இந்த சட்டமூலம் குறித்து தனது மதிப்பீட்டினை தெரிவித்துள்ளதால் நான் இது குறித்து பின்னரே உங்களிற்கு கருத்து தெரிவிக்கவேண்டும்.

அதனை ஆழமாக ஆராய்வதற்கான வாய்ப்பு எங்களிற்கு கிடைக்கவில்லை.

கேள்வி ; ஜெனீவா தீர்மானத்தினை மனித உரிமை செயற்பாட்டாளர்கள் சிவில் சமூகத்தினர் வரவேற்றுள்ளனர் என நீங்கள் தெரிவிக்கின்றீர்கள் -எனினும் இதனை நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரம் அரசாங்கத்திற்கே உள்ளது-இதற்கான பிரிட்டனின் பதில் என்ன?

பதில் ; அனைத்து விடயங்கள் தொடர்பிலும் நாங்கள் இலங்கை அரசாங்கத்துடன் பகிரங்கமாக விவாதித்துள்ளோம் கருத்துப்பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளோம்.

நான் முன்னர் சொன்னது போல தற்போதைய ஜனாதிபதி பிரதமராக பதவிவகித்தவேளை கருத்துடன்பாடு காணப்பட்டது.

அவ்வேளை இலங்கை அரசாங்கமும் சர்வதேச சமூகமும் தீர்மானம் குறித்து இணைந்து செயற்பட்டன.என்னை பொறுத்தவரை அது சிறந்த நடைமுறை.

ஆனால் தற்போது அரசாங்கம் தான் அந்த நிலைக்குதிரும்பவிரும்பவில்லை என தொவிpக்கின்றது.

நாங்கள் இவற்றை (ஜெனீவா தீர்மானம்) மோதலிற்காக முன்னெடுக்கவில்லை மாறாக பிரிட்டன் ஏனைய பல நாடுகளுடன் உலகின் எந்த பகுதியையும் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர்களுடன் இணைந்து செயற்படுகின்றது.

கேள்வி ; இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் காணப்படும் போது இரண்டு தீவிரபோக்குகள் காணப்படுவதை நாங்கள் காண்கின்றோம்-ஒரு தரப்பினர் நாட்டில் உள்ளனர் அவர்கள் குறைந்தளவு அதிகாரப்பரவலாக்கலை கூட ஏற்க தயாரில்லை-இன்னுமொரு தீவிரவாத போக்குடையவர்கள் புலம்பெயர் தமிழர்கள் அவர்கள் தனிநாட்டை கோருகின்றனர்.

இந்த இருதரப்பினர் மத்தியிலும் சமநிலையை காண்பதற்கு பிரிட்டன் உதவமுடியுமா?

பதில் ; இலங்கைமக்களிடம் பேசுவதே முதல் முக்கிய விடயம் என நான் தெரிவிப்பேன் -எவரும் தனிநாடு குறித்து பேசுவதை நான் காணவில்லை செவிமடுக்கவில்லை.

13 வது திருத்தம் குறித்து மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன -அதிகாரப்பரவாலாக்கல் என்றால் என்ன என்பது குறித்து மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன.

எனினும் தனிநாடுகுறித்த கருத்துக்கள் விவாதங்கள் எவற்றையும் நான் இலங்கைக்குள் காணவில்லை.

13 வதுதிருத்தத்தின் மூலமான குறிப்பிட்ட அளவு அதிகாரப்பரவலுடன் கூடிய ஐக்கிய இலங்கை என்பதிலேயே எதிர்காலம் தங்கியுள்ளது என்பதே இந்தியா பிரிட்டன் அமெரிக்கா ஆகியவற்றை உள்ளடக்கிய நாடுகளின் நிலைப்பாடாக உள்ளது.