அலி சப்ரி – ஜெய்சங்கர் நியூயோர்க்கில் சந்திப்பு

இலங்கை – இந்தியாவுக்கு இடையி லான பலம்வாய்ந்த இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்திக்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து இருநாடுகளி னதும் வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டாக ஆராய்ந்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 78 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்ப தற்காக நியூயோர்க் சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையி லான உயர்மட்டப்பிரதிநிதிகள் குழு, கடந்த வாரம் முழுவதும் அங்கு பல்வேறு உயர்மட்ட சந்திப்புக்களில் கலந்து கொண்டது.

இந்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் நாடு திரும்பி யுள்ள பின்னணியில் வௌpவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான உயர்மட்டக்குழுவினர் இன்னமும் அமெரிக் காவில் தங்கியிருந்து உயர்மட்ட சந்திப் புக்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

அதன் ஓரங்கமாக அமைச்சர் அலி சப்ரிக்கும் இந்திய வௌpயுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்க ருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று முன்தினம் திங்கட்கிழமை நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது இலங்கை – இந்தி யாவுக்கு இடையிலான பலம்வாய்ந்த இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத் திக்கொள்வது குறித்துக் கலந்துரை யாடப்பட்டதாக அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அதேவேளை, நேற்று முன்தினம் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத் தின் பணிப்பாளர் அச்சிம் ஸ்டெய்னரை சந்தித்த அமைச்சர் சப்ரி, டிஜிட்டல் மய மாக்கம், காலநிலை மாற்ற சவால்க ளுக்கு ஈடுகொடுக்கும் தன்மை, சக்தி வலு விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு மற்றும் பல்தரப்பு ஒத்துழைப்புக்களை வலுப்படுத்திக் கொள்வது குறித்துக் கலந்துரையாடியுள்ளார்.

அதுமாத்திரமன்றி ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தினால் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் சிறந்த திட்டங்கள் தொடர்பில் அவர் தனது பாராட்டையும் வௌpப்படுத்தியுள்ளார். மேலும், பொருளாதார மற்றும் சமூக விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகள் திணைக்களத்தின் பிரதி செய லாளர் நாயகம் லிஜன்ஹவாவுக்கும் அமைச்சர் அலி சப்ரிக்கும் இடையிலான சந்திப்பு நேற்று முன்தினம் ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் நடைபெற்றது.

இதன்போது பொருளாதார ரீதியில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் தொடர்பில் லி ஜன்ஹவா பாராட்டுத் தெரிவித்துள்ளார். அத்தோடு 2030 ஆம் ஆண்டுக்கான நிலை பேறான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்கான ஒத்துழைப்புக் களை விரிவுபடுத்திக்கொள்வது குறித் தும் இச்சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.