ஆர்ப்பாட்டக்காரர்கள் காலிமுகத்திடலில் இருந்து வெளியேற முடிவு!

காலி முகத்திடல் கோட்ட கோ கம போராட்டக் காரர்கள் அங்கிருந்து வெளியேறத் தீர்◌ானித்துள்ளனர்.

இதன்படி அங்கிருந்து வெளியேறுமாறு பிறப்பத்த பொலிஸாரின் உத்தரவை நிராகரிக்குமாறு கோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் நால்வர் தாக்கல் செய்திருந்த நான்கு ரிட் மனுக்களை இன்று அவர்கள் மீளப்பெற்றுக் கொண்டுள்ளனர்.

இந்த மனுக்கள் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணிகளான எம்.ஏ சுமந்திரன் மற்றும் சாலிய பீரிஸ் உள்ளிட்ட சட்டத்தரணிகள், தமது தரப்பினர் காலி முகத்திடல் பிரதேசத்தை விட்டு வெளியேற தீர்மானித்துள்ளதாக நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.