தாய்லாந்து போகும் கோத்தாபய ராஜபக்‌ஷ!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்து செல்ல தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாளைய தினம் அவர், தாய்லாந்து செல்லவுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அவர் அந்நாட்டில் சிறிது காலம் தங்கியிருக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் ஜூலை 14 முதல் சிங்கப்பூரில் தங்கியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.