ஆர்ப்பாட்டப் பேரணியில் 25 பேர் கைது!

அனைத்து பல்கலைகழக மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்பட்டது.

இதன்போது பொலிஸார் கண்ணீர்ப் புகைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இவ்வேளையில் பொலிஸாருக்கும் மாணவர்களுக்கும் இடையே முறுகல் ஏற்பட்ட நிலையில், அதன்போது அமைதியற்ற முறையில் நடந்துகொண்ட குற்றச்சாட்டில் 25 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.