இராமாயணத்தில் குறிப்பிடப்பட்ட இடங்களை பார்வையிட 800 இந்திய சுற்றுலா பயணிகள் இலங்கை வர தீர்மானம் – ஹரின்

பழங்கால புராணமான இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களை பார்வையிடுவதற்காக 78 இந்திய சுற்றுலாப் பயணிகள் இன்று (23) காலை நாட்டை வந்தடைந்தனர்.

இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதைத் தவிர, இந்த பயணிகள் ஏனைய பிரசித்தி பெற்ற இந்து மதத் தலங்களுக்கும் செல்லவுள்ளனர்.

அத்தகைய 800 இந்திய சுற்றுலாப் பயணிகள் அடுத்த ஆறு மாதங்களில் இலங்கைக்கு குழுக்களாக வருகை தரவுள்ளனர்.

சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக இந்த செயற்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.