இலங்கைக்கு எதிராக வாக்களிக்குமாறு ஆதரவு திரட்டும் கனடா, பிரிட்டன் தூதுவர்கள்!

ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என கொழும்பில் உள்ள, பேரவை உறுப்பு நாடுகளின் தூதுவர்களிடம் அனுசரணை நாடுகளின் தூதுவர்கள் இருவர் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக்கான பிரிட்டிஷ்தூதுவர் சாரா ஹல்டன் தென்கொரிய தூதுவரையும் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவையும் கடந்த இரண்டாம் திகதி சந்தித்துள்ளார்.

இதேவேளை இலங்கைக்கான கனடா தூதுவர் டேவிட் மக்கினன் இலங்கைக்கான பங்களாதேஸ் தூதுவரை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார்.

பங்களாதேசும் தென்கொரியாவும் மனித உரிமை பேரவையின் இம்முறை அமர்வில் வாக்களிக்கும் தகுதி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.