சட்டரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு முன்வைக்கப்பட்டவுடன் மாகாண சபைத் தேர்தல் – தேர்தல்கள் ஆணைக்குழு

சட்டரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு முன்வைக்கப்பட்டவுடன் மாகாண சபைத் தேர்தலை நடத்தவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நிலவும் சட்ட ரீதியான பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்திற்கும் சகல கட்சிகளுக்கும் தெரியப்படுத்தியிருப்பதாக ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

இந்த நிலையில், குறித்த பிரசினைகளுக்கு தீர்வு முன்வைக்கப்பட்டவுடன் மாகாண சபைத் தேர்தலை நடத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.