இலங்கையின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு இலங்கை ஆதரவு வழங்கும் – ஜேக் சல்லிவன்

இலங்கையின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையைப் பாதுகாப்பதற்காக அமெரிக்க தேசிய பாதுகாப்பிற்கு முழு ஆதரவு வழங்கும் என தேசிய பாதுகாப்பு தலைவர் ஜேக் சல்லிவன் இதனை தெரிவித்துள்ளார்

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் தலைமை அதிகாரியுமான சாகல ரத்நாயக்கவுடன் இன்று (10) தொலைபேசி கலந்துரையாடலில் கலந்துகொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

விரைவான பொருளாதார முன்னேற்றத்தை அடைவதற்கு இலங்கையின் தொடர்ச்சியான முயற்சிகளை பாராட்டினார்.

மேலும் அவர் , சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தால் சுட்டிக்காட்டப்பட்ட பொது நிதி, பணம் மற்றும் கட்டுப்பாடு ஆகியவை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளதுடன் சீர்திருத்தங்களை நிறைவேற்றுவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.

இதன் போது பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் மேலும் இது குறித்த எதிர்கால எதிர்பார்ப்புகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த இரு நாடுகளுக்கு இடையே பரஸ்பர இலக்குகளை அடைவதற்காக இலங்கையுடன் தொடர்ந்த ஈடுபட செய்வதில் உறுதியாக இருப்பதாக சல்லிவன் மேலும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளில் இந்த உரையாடல் முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.