மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் நிறுவ முயற்சிக்கப்படும் தற்காலிகமான பொறிமுறைகளை இலங்கையால் ஏற்றுக்கொள்ள முடியாது என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்தப் பொறிமுறையானது ஐநா.சாசனத்தின் ஆவணங்களுக்கு ஏற்ப அமையவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
பொதுநலவாய அமைப்பின் பொதுச் செயலாளர் பட்ரிசியா ஸ்கொட்லேன்ட்டுடன் வீடியோ ஊடாக நடத்தப்பட்ட கலந்துரையாடல் ஒன்றிலேயே ஜீ.எல்.பீரிஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நியூயோர்க் நகரில் இருந்து வெளிவிவகார அமைச்சர் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தார்.
பொதுநலவாய அமைப்பின் ஸ்தாபக உறுப்பு நாடு என்ற வகையில் இலங்கை முன்னெச்சரிக்கையாகவும், அமைப்பின் மதிப்புக்கள், கொள்கைகள் மற்றும் குறிக்கோள்களுக்கு இணங்க அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக அமைச்சர் பீரிஸ் இதன்போது தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய நாடுகளுடன் வணிகம், கல்வி, தொழிற்பயிற்சி மற்றும் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல துறைகளிலான ஒத்துழைப்பை இலங்கை மேலும் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை உள்ளூர் நிறுவனங்கள் தமது ஆணைகளை நிறைவேற்றுவதற்குப் போதுமான அமைப்புக்கள் தேவைப்படுகின்றன. இந்த நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் பணிகளை வெளிப்புற அமைப்புக்களால் மாற்றவோ அல்லது கையகப்படுத்தவோ முடியாது என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில் வர்த்தகம், விளையாட்டு, இளைஞர்கள் மற்றும் வன்முறைத் தீவிரவாதத்தை எதிர்த்தல் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலான இலங்கையின் தொடர்ச்சியான ஒத்துழைப்பை பொதுநலவாய அமைப்பு பாராட்டுவதாக பொதுச்செயலாளர் ஸ்கொட்லேன்ட் இதன்போது தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
TRENDING TODAY
- ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் மைத்திரி வழங்கிய வாக்குமூலங்கள் பகிரங்கப்படுத்த வேண்டும் – ஜனா எம்.பி. வலியுறுத்து
- வவுனியாவில் இடம்பெற்ற ரெலோவின் 11 வது தேசிய மாநாடு
- தமிழரசுக் கட்சியை ஒற்றுமைக்குள் கொண்டு வர வேண்டும் – செல்வம் எம்.பி
- தமிழ் ஈழ விடுதலை இயக்கம் 11வது தேசிய மாநாட்டுப் பிரகடனம் 2024
- தமிழர் தாயகத்தை காப்பாற்ற ஒற்றுமையாக அணிதிரள்வோம் : செல்வம் எம்பி வலியுறுத்து
- ரெலோவின் பொதுக்குழுக்கூட்டமும், நிர்வாகத் தெரிவும் வவுனியாவில் இடம்பெற்றன.
- வலி வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த 278 ஏக்கர் காணி விடுவிப்பு
- சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 42 மேலதிக வாக்குகளால் தோற்கடிப்பு
- ரெலோவின் பதினோராவது தேசிய மாநாடு எதிர்வரும் 21 ஆம் திகதி வவுனியாவில்
- மன்னார் தீவு காற்றாலை மின் உற்பத்தி சுற்றாடல் பேரழிவை ஏற்படுத்தலாம் – சஜித் பிரேமதாச
- தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்குவதாக காலங்காலமாக ஏமாற்றி வரும் ரணில் விக்கிரமசிங்க – தயாசிறி ஜயசேகர குற்றச்சாட்டு
- காங்கேசன்துறைமுக அபிவிருத்திக்கு இந்தியாவினால் 61.5 மில்லியன் டொலர் நிதி உதவி
- மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது சிக்கலை ஏற்படுத்தியவர் சுமந்திரனே – நீதியமைச்சர் குற்றச்சாட்டு
- பெளத்த பிக்குகளின் பேரரசியல் அபிலாஷைகளைத் தடுக்காத வரை வெடுக்குநாறிமலை போன்ற சம்பங்கள் தொடர்ந்து அரங்கேறும்
- மத்திய வங்கியின் சம்பள அதிகரிப்பை ஒத்திவைக்குமாறு பரிந்துரை
- சீன ஆராய்ச்சிக் கப்பலிற்கு தடை விதித்து விட்டு ஜேர்மன் ஆராய்ச்சிக் கப்பலிற்கு அனுமதி வழங்கியமைக்கு சீன தூதரகம் கடும் எதிர்ப்பு
- வெடுக்குநாறிமலை கைது விவகாரம் – பாராளுமன்றத்தில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்
- ரெலோ சுவிஸ் கிளையால் வுவுனியா தாஸ் நகர் முன்பள்ளிக்கு நிதியுதவி
- அம்பாறை மாவட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் உபதலைவர் ஹென்றி மகேந்திரன் தலைமையில் இடம்பெற்றது
- சர்வதேச நாணய நிதியத்தினருக்கும் தேசிய மக்கள் சக்தியினருக்கும் இடையில் சந்திப்பு
{"ticker_effect":"slide-h","autoplay":"true","speed":"5000","font_style":"normal"}