இலங்கை இராணுவத்திற்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்கியது சீன இராணுவம்

சீனா மக்கள் விடுதலை இராணுவத்தினால் (People’s Liberation Army of China) இலங்கை இராணுவத்திற்கு Sinopharm தடுப்பூசிகள் அன்பளிப்பாக வழங்கப்படவுள்ளன.

அன்பளிப்பு செய்யப்பட்டுள்ள Sinopharm தடுப்பூசிகள் எதிர்வரும் 28 ஆம் திகதி நாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த 300,000 சினோபார்ம் தடுப்பூசிகளும் எதிர்வரும் 28ஆம் திகதி நாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.