இலங்கை குறித்து ஐ.நா.மனித உரிமைகள் குழுவில் விவாதம்

இலங்கை குறித்து மனித உரிமைகள் குழுவின் அடுத்த அமர்வில் விவாதிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அங்கமான, மனித உரிமைகள் குழுவின் நூற்று முப்பத்தி ஆறாவது அமர்வு நேற்று நிறைவடைந்துள்ளது.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கையை அரசாங்கங்கள் செயற்படுத்துவதைக் கண்காணிக்கும், சுதந்திரமான நிபுணர்களின் அமைப்பாக மனித உரிமைகள் குழுவின்  நூற்று முப்பத்தி ஆறாவது  அமர்வு ஒக்டோபர் 10ஆம் திகதி ஆரம்பமாகியிருந்தது.

 

அந்த அமர்வில், எதியோப்பியா, ஜப்பான், கிர்கிஸ்தான், நிகரகுவா, பிலிப்பைன்ஸ் மற்றும் ரஷ்ய கூட்டமைப்பு ஆகியன தொடர்பான அறிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், மனித உரிமைகள் குழுவின் நூற்று முப்பத்தி ஏழாவது அமர்வு அடுத்த ஆண்டு பெப்ரவரி 27ஆம் திகதி தொடக்கம், மார்ச் 24ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்த அமர்வில், இலங்கை, எகிப்து, பனாமா, பெரு, துர்க்மெனிஸ்தான் மற்றும் சாம்பியாவின் காலமுறை அறிக்கைகள் மதிப்பாய்வு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.