தமிழ் தேசிய வீரர்கள் தினம் திருகோணமலையில் உள்ள வெலிக்கடை தியாகிகள் அரங்கில் நினைவுகூரப்பட்டது

வெலிக்கடை தியாகிகள் – 25-07-2026 தமிழ் தேசிய வீரர்கள் தினம்

திருகோணமலையில் உள்ள வெலிக்கடை தியாகிகள் அரங்கில் திருகோணமலை மாவட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தினால் சுடர் ஏற்றப்பட்டு நினைவுகூரப்பட்டது.

நினைவுத் தூபிக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணிச் செயலாளரும் திருகோணமலை மாநகர சபை உறுப்புனருமான தி.பிரபாதரன் மற்றும் மாநகரசபை உறுப்பினர் சற்பரூபன், திருகோணமலை பட்டனமும் சூழலும் பிரதேசசபை உறுப்பினர்கள் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் நிருவாக செயலாளர் நித்தி மாஸ்டர், திருகோணமலை மாவட்ட செயலாளர் விஜயகுமார் தலைமைக்குழு உறுப்பினர் இலண்டன் ரூபன் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவாளர்களின் பங்களிப்புடன் நினைவு தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு நினைவுச் சுடரேற்றப்பட்டு நினைவு கொள்ளப்பட்டது.

This post is also available in: English