ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டது

ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபைச் சமவாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில ஏற்பாடுகள், சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நெறிகள், நியமங்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் இன்று (06) வியாழக்கிழமை வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.

ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தில் விசேடமாக ‘இலஞ்சம் அல்லது ஊழலுக்கு எதிரான விடயங்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு’என்ற பெயர் வடிவிலான சுயாதீன ஆணைக்குழு ஒன்றை ஸ்தாபிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இடையறா வழியுரிமையையும், பொது இலட்சியையொன்றையும் கொண்டிருக்க வேண்டும்.

தவிசாளர் உட்பட மூன்று உறுப்பினர்களை கொண்டதாக ஆணைக்குழுவின் அமைப்பு காணப்படும்.சட்டம் – மருத்துவ கணக்காய்வுசட்டம் – மருத்துவக் கணக்கியல், பொருளியல், சர்வதேச தொடர்புகளும் இராஜதந்திர சேவைகள், பகிரங்க அலுவலக முகாமைத்துவம் அல்லது பொது முகாமைத்துவம் ஆகிய துறைகளில் ஆகக்குறைந்தது 20 ஆண்டுகால சேவைகளை கொண்டிருத்தல் வேண்டும்.

ஆணைக்குழுவின் ஒவ்வொர் உறுப்பினர்களும் இலங்கை பிரஜையாக இருத்தல் வேண்டும், அறுபத்திரெண்டு வயதிற்கு மேற்பட்டவராக இருத்தலாகாது, உடல் ரீதியிலும், உளரீதியிலும் தகுதியுடையவராக இருத்தல் வேண்டும். அத்துடன் தகுதி வாய்ந்தவராகவும், நேர்மையானவராகவும், உயர் ஒழுக்கமுடையவராகவும், நன்மதிப்புள்ளவராகவும் இருத்தல் வேண்டும்.

ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்படுவதற்கு முன்னர் சம்பளம் பெறும் தொழில்களில் ஈடுபட்டிருப்பின் அவற்றை துறத்தல் வேண்டும். அத்துடன் ஆணைக்குழுவின் உறுப்பினராக பதவி வகிக்கும் போது சம்பளம் பெறும் சேவைகள், உயர் தொழில்கள் ஆகியவற்றை தொடர கூடாது.

ஆணைக்குழுவின் தலைவர், உறுப்பினராக பதவியேற்க முன்னர் அவர்கள் தங்களின் அனைத்து சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களையும், பொறுப்புக்களையும் அரசியலமைப்பு பேரவைக்கு வெளிப்படுத்த வேண்டும்.

ஆணைக்குழுவின் தவிசாளர் ஐந்தாண்டு காலத்திற்கும், ஏனைய உறுப்பினர்கள் நான்காண்டு காலத்திற்கும் பதவி வகிப்பார்கள். இவர்களின் சம்பளம் பாராளுமன்றத்தின் திரட்டு நிதியத்தின் மீது பொறுப்பாக்கப்பட்டுள்ளது, பதவி காலத்தின் போது சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டுமே தவிர குறைக்கப்பட கூடாது.

ஆணைக்குழுவானது 158 ஆம் பிரிவின் ஏற்பாடுகளின் கீழ் அதன் பணிகளை நிறைவேற்றுவதற்காக பாராளுமன்றத்திற்கு பொறுப்புள்ளதாகவும் பொறுப்பு கூற வேண்டியுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் 159 ஆவது உறுப்புரையின் பிரகாரம் ஒவ்வொரு ஆண்டும் ஆணைக்குழுவின் செயலாற்றுகை தொடர்பான அறிக்கை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

(1) பிரிவு 41 மற்றும் 65ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் கீழ் ஆணைக்குழு அதன் தத்துவங்களைப் பிரயோகிப்பதற்கும் அதன் பணிகளை நிறைவேற்றுவதற்குமான கூட்ட நடப்பெண் இரண்டு உறுப்பினர்களாக இருத்தல் வேண்டும்.

ஆணைக்குழுவின் பொறுப்புக்களாக விதிகளை அழுத்திக் கூறுதல், வலியுறுத்தல் ஊடாக ஊழலை தடுத்தல் தொடர்பான கல்வி அல்லது பயிற்சியை உரிய தரப்பினருக்கு வழங்கல், ஊழல், அதற்கான காரணங்களும் அதன் பாரதூரத்தன்மை மற்றும் அதனால் ஏற்படுத்தப்பட்ட அச்சுறுத்தல்கள் என்பன தொடர்பாக பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தல், ஊழலைத் தடுத்தல், ஊழலுக்கு எதிரான போராட்டத்திலும் ஈடுபடல். ஆணைக்குழுவானது குடியியற் சமூகத்தினதும், அரச சார்பற்ற மற்றும் சமுதாய அடிப்படையிலான ஒழுங்கமைப்புக்களினதும் முனைப்பான பங்குப்பற்றலை ஊக்குவித்தல் வேண்டும்.