ஐ.நா கூட்டம் நடப்பதாலேயே இராஜினாமா: லொஹான் விளக்கம்!

ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டம் இடம்பெறும் வேளையில் அங்கு சென்றுள்ள ஜனாதிபதிக்கு நெருக்கடி ஏதும் ஏற்படாதிருக்கும் வண்ணமே தாம் இராஜினாமா அறிவிப்பை செய்ததாக விளக்கமளித்துள்ளார் லொஹான் ரத்வத்த.

எனினும், தம் மீது சுமத்தப்பட்டிருக்கும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுப்பதாகவும் அவ்வாறு எதுவும் இடம்பெறவில்லையெனவும் அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

சிறைச்சாலைகளுக்கு பொறுப்பான அமைச்சர் என்கிற வகையில் தமது கடமையைச் செய்யவும் சிறைக்கைதிகளின் நலன் விசாரிக்கவுமே தாம் அங்கு சென்றதாக லொஹான் கூறுகின்ற போதிலும், வெலிகடை சிறைச்சாலையில் லொஹானால் ஏற்பட்ட பதற்றம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.