கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டுக்கு அருகில் கம்மன்பில தலைமையில் போராட்டம்!

நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தலைமையிலான அடிப்படைவாத குழுவொன்று இன்று (26) கொழும்பிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டுக்கு அமையாக போராட்டத்தில் ஈடுபட்டது.

கொள்ளுப்பிட்டி, ராணி வீதியிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டை நோக்கி, இன்று மதியம் 2.30 மணியளவில் உதய கம்மன்பில தலைமையில் வந்த சுமார் 150 பேர் வரையிலான அடிப்படைவாதிகளை பொலிசார் வழிமறித்தனர்.

அவர்களை கஜேந்திரகுமாரின் வீட்டை நெருங்க பொலிசாரும், அதிரடிப்படையினரும் அனுமதிக்கவில்லை.

பொலிசாரின் நீர்த்தாரை பிரயோக வாகனமும் அங்கு தரித்து நின்றது.

கஜேந்திரகுமாரின் வீட்டை நெருங்க பொலிசார் அனுமதிக்காத நிலையில், அதற்கு பக்கத்து வீட்டின் முன்பாக நின்று கம்மன்பில கூட்டம் சத்தமிட்டபடி நின்றது. சிறிது நேரம் கூச்சலிட்டபடி நின்ற கும்பலை பொலிசார் அப்புறப்படுத்தினர்.