கப்பல் விவகாரம் – இலங்கை குறித்த நிகழ்வை இடை நிறுத்தியது சீனா

சீன கப்பலிற்கு இலங்கை அனுமதியளிக்க மறுத்துள்ளமைக்கு பதிலடியாக சீனாவில் உள்ள இலங்கை துாதரகம் ஏற்பாடு செய்துள்ள நிகழ்வொன்றை சீனாவின் சமூக ஊடகமொன்று இடைநிறுத்தியுள்ளது என தவல்கள் வெளியாகியுள்ளன.

வெள்ளிக்கிழமை இலங்கை அதிகாரிகள் இலங்கை குறித்த ஊடக்குவிப்பு பிரச்சாரமொன்றை  டுயினில் ஏற்பாடு செய்திருந்தனர். எனினும் அதனை முன்னெக்க முடியாது என இலங்கை அதிகாரிகளிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

யுவான் வாங் 5 கப்பலிற்கு அனுமதியளிக்க மறுத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த சமூக ஊடகம் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக  இலங்கை அதிகாரிகள் கருதுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனாவின் சமூக ஊடகங்களில் இலங்கைக்கு எதிரான எதிர்மறையான கருத்துக்கள் அதிகளவில் காணப்படுவதாகவும் சீனாவின் சில பல்பொருள் அங்காடிகள் இலங்கை பொருட்களை கொள்வனவு செய்ய மறுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.