கருவுடன் அமெரிக்க தூதுவர் பேச்சுவார்த்தை

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் முன்னாள் சபாநாயகர் கருஜெயசூரியவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

தனது டுவிட்டர் பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அனைவருக்குமான இலங்கையின் பொருளாதார வளர்ச்சி பாதையில் நல்லாட்சி மற்றும் வெளிப்படைதன்மையின் முக்கியத்துவம் குறித்து முன்னாள் சபாநாயகருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கண்காணிப்பு குழுக்களை வலுப்படுத்துவது குறித்தும் ஆராய்ந்ததாகஅவர் தெரிவித்துள்ளார்.