கோட்டாவை பதவியில் அமர்த்தவே ஈஸ்டர் தாக்குதல்- சந்திரிகா குற்றச்சாட்டு

கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி பதவியில் அமர்த்தவே, 2019 இல் உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் நடத்தப்பட்டதாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தாக்குதல்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பொறுப்பேற்க வேண்டும் என சிலர் கோரிக்கை விடுக்கின்றனர்.

குற்றச்சாட்டுகளை நம்புவதாக கூறிய சந்திரிகா, இந்த விடயத்தில் நீதிமன்றம் விரைவில் முடிவு செய்யும் என்றும் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அழித்துவிட்டு, அரசியல் ஆதாயத்திற்காக சுதந்திரக் கட்சியை பயன்படுத்த ராஜபக்ஷர்கள் முயற்சிப்பதாகவும் அவர் மேலும் குற்றம் சாட்டினார்.