சர்வதேச நாணய நிதியத்தை இணங்கச்செய்யுமா சிறிலங்கா? தப்பிக்க வழி கூறும் நிசாந்த டி மெல்

சர்வதேச நாணய நிதியத்தை இணங்கச்செய்யும் பொருளாதார திட்டத்தை சிறிலங்கா வகுக்க வேண்டும் என்கிறார் வெரைட்டே ஆய்வகத்தின் தலைவர் நிசாந்த டி மெல்(Nishantha de Mel).

கொழும்பைத் தளமாக கொண்டு இயங்கும் புத்திஜீவிகள் அமைப்பான, வெரைட்டே ஆய்வகத்தின் தலைவரான இவர், சிறிலங்கா வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் உரையாற்றிய அவர், “ஒருவர் வங்கியில் கடன் பெறச் செல்லும் போது, அவரது வணிகத்துக்கான திட்டத்தை அவரே தயாரிக்க வேண்டும் எனும் தன்மையே உள்ளது.

அதனை விடுத்து கடன் தருநரை வணிகத் திட்டத்தை தயாரிக்கச் செய்து, அந்தத் திட்டம் தமக்கு பொருந்தாது என்று புலம்பக் கூடாது.

அவ்வாறே சிறிலங்காவும் தமது பொருளாதாரத் திட்டத்தை நிபுணர்களைக் கொண்டு தயாரித்து, அதற்கு சர்வதேச நாணய நிதியத்தை இணங்கச் செய்ய வேண்டும்.

மாறாக சிறிலங்காவின் பொருளாதார விடயங்கள் தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்தை தீர்மானிக்க, ஒருபோதும் விடக் கூடாது” என்றார்.