சிறந்த 100 புகைப்படங்களில் ஒன்றாக கோத்தபாயவின் சேதமாக்கப்பட்ட அறை

இவ்வருடம் ஜூலை 15ஆம் திகதி அத்துமீறி நுழைந்து ஆர்ப்பாட்டக்காரர்களால் சேதமாக்கப்பட்ட அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் உள்ள அலுவலகத்தை 2022ஆம் ஆண்டின் சிறந்த 100 புகைப்படங்களில் ஒன்றாக டைம்ஸ் சஞ்சிகை குறிப்பிட்டுள்ளதுடன், அதன் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.

100 புகைப்படங்களை டைம்ஸ் இதழின் 8 புகைப்பட ஆசிரியர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த ஆண்டு பல்வேறு நிகழ்வுகள் நிறைந்த ஆண்டாக உள்ளதனைக் காட்டவே இந்த 100 புகைப்படங்களை தேர்ந்தெடுத்ததன் நோக்கம் என டைம்ஸ் இதழ் தெரிவித்துள்ளது.