சீன வழியில் இலங்கை: OIC கண்டனம்!

சீனாவில் முஸ்லிம்களை அநீதியாகக் கைது செய்யப்படும் முஸ்லிம்களை அடைத்து வைக்கும் ‘புனர்வாழ்வு மையங்கள்’ போன்று இலங்கையிலும் தீவிரவாத சிந்தனைக்குள்ளானவர்களை புனர்வாழ்வு மையங்களை உருவாக்கும் இலங்கை அரசின் திட்டத்துக்கு அரபு நாடுகளின் கூட்டுறவுக்கான அமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது.

குறித்த திட்டத்தின் ஊடாக, முஸ்லிம்களை வகை தொகையின்றி கைது செய்து அடைக்கக் கூடிய அபாயம் நிலவுவதாக அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

புர்கா தடை தொடர்பிலும் அவதானம் வெளியிட்டுள்ள குறித்த அமைப்பு, இலங்கை, பன்முகத்தன்மையிலிருந்து விலகிச் செல்வதற்கான அறிகுறிகளே காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.