சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவு !

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் டி சில்வா, ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அவர் அம்பலாங்கொட தொகுதிக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவிடமிருந்து கட்சி உறுப்புரிமையையும் நியமனக் கடிதத்தையும் ஷான் விஜயலால் டி சில்வா பெற்றுக்கொண்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினரான இவர் கடந்த பொதுத் தேர்தலின் போது பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.

ஷான் விஜயலால் டி சில்வா மூன்று முறை தென் மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சராகவும் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.