சென்னையிலிருந்து 100 பயணிகளுடன் நேற்று முதல் கப்பல் யாழ். வந்தது

இந்தியாவிலிருந்து சுமார் நூறு பயணிகளுடன் முதல் பயணிகள் கப்பல் நேற்று வெள்ளிக்கிழமை காங்கேசன்துறை துறைமுகத்துக்கு வருகை தந்தது.

இந்தியாவிலிருந்து காங்கேசன்துறை துறைமுகத்துக்கான பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்கும் பரீட்சார்த்த முயற்சியாகவே நேற்று இந்தக் கப்பல் வந்தது.

இந்தக் கப்பலை விமானசேவைகள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டீ சில்வா, கடற்றொழில் அமைச்சர் கே. என். டக்ளஸ் தேவானந்தா, இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன், யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஆகியோர் உட்பட பல அதிகாரிகள் வரவேற்றனர்.