ஜனாதிபதித் தேர்தல் வாக்குச் சீட்டில் மொட்டுச் சின்னம் நிச்சயம் இடம்பெறும் – சாகர காரியவசம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை நிச்சயமாக முன்வைக்கும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

கெஸ்பேவ பிரதேசத்தில் நேற்று ) இடம்பெற்ற கட்சி உறுப்பினர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கட்சியின் செயலாளர் நாயகம் இதனை தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை முன்வைத்துள்ள நிலையில், யார் வேட்பாளர் என்பதை நாங்கள் இன்னும் தீர்மானிக்கவில்லை.

யாரை வேட்பாளராக தெரிவு செய்வது என்று இன்னும் முடிவு செய்யவில்லை.

ஆனால், கட்சியின் செயலாளர் என்ற வகையில், எமது கட்சியின் கீழ், அடுத்த ஜனாதிபதித் தேர்தல் வாக்குச்சீட்டில் பொஹட்டுவ சின்னம் இடம்பெறும் என்பதை என்னால் மிகுந்த நம்பிக்கையுடன் கூற முடியும் என்றார்.