ஜப்பானிய பிரதமர் அடுத்தவாரம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்

ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதுடில்லியில் நடைபெற்ற ஜி. 20வது அரச தலைவர் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வரும் ஜப்பான் பிரதமர் இலங்கைக்கும் விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் முக்கிய அபிவிருத்தி உதவி பங்காளிகளில் ஒருவரான ஜப்பானிய தலைவர், ஜனாதிபதி தலைமையிலான அரச அதிகாரிகளுடன் நாட்டின் கடன் மறுசீரமைப்பு மற்றும் எதிர்கால முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கலந்துரையாட வருவதாக தெரிவிக்கப்படுகிறது.