ஞானசார தேரருக்கு கொழும்பு பிரதான நீதிமன்றம் பிடியாணை பிறப்பிப்பு

நீதிமன்றத்திற்கு சமூகமளிக்காததை தொடர்ந்து பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரருக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதத்தில் கருத்து தெரிவித்த வழக்கில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் அவர் ஆஜராகததை தொடர்ந்து நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் நீதிமன்றில் முன்னிலையாகாத காரணத்தினால் அவரை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.