மைத்திரிக்கு எதிரான வழக்கு 10 வாரங்களுக்கு ஒத்திவைப்பு!

ஈஸ்டர் தாக்குதலை தடுக்கத் தவறியதாக தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணைகளை 10 வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பான விசாரணையை இடைநிறுத்த உத்தரவிடுமாறு கோரி மைத்திரிபால சிறிசேனவினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள இடைநகர்த்தல் மனுவை அடிப்படையாகக் கொண்டே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.