தடுப்பூசி அட்டைக்கு எதிராக சிங்கள ராவய வழக்கு

கட்டாய தடுப்பூசிகள் மற்றும் தடுப்பூசி போடப்படாத நபர்கள் பொது இடங்களுக்கு செல்வதைத் தடுக்கும் விதிமுறைகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யபோவதாக சிங்கள ராவய அமைப்பு அறிவித்துள்ளது.

உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவை. இன்று (24) தாக்கல் செய்யவுள்ளதாக அவ்வமைப்பு அறிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி அட்டையை கட்டாயப்படுத்தியுள்ள அரசாங்கம், பொது இடங்களுக்குச் செல்லும் போது, அந்த அட்டையை எடுத்துச் செல்லவேண்டும். இந்த நடைமுறை செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் அமுலில் இருக்கும் என அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.