மங்களவின் பூதவுடல் அக்கினியுடன் சங்கமமாகியது

மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் பூதவுடல் இன்று அக்கினியுடன் சங்கமமாகியது.

கடந்த ஆகஸ்ட் 13 ஆம் திகதி கொரோனா தொற்றுக்குள்ளான மங்கள சமரவீர கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (24) காலமானார்.

இந்நிலையில், அன்னாரது இறுதிக் கிரியை இன்று (24) மாலை பொரள்ளை பொதுமயானத்தில் கொவிட் சுகாதார விதிமுறைகளுக்கு அமைய தகனம் செய்யப்பட்டது