தமிழ் ஈழ தேசபிதா தங்கதுரை அவர்களின் 75 வது அகவை தினம்

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) ஸ்தாபகர் தங்கத்துரை அவர்களின் 75 ஆவது அகவை தினம் இன்று 25.08.2023 ஆகும்.

நாம் வன்முறை மீது காதல் கொண்ட மனநோயாளிகள் அல்ல என்று சிறிலங்கா நீதிமன்றத்தில் அரசியல் தீர்க்கதரிசனம் ஆன உரையை நிகழ்த்தினார்.

தலைவர்களை அழிப்பதன் மூலம் அவர்கள் விட்டு சென்ற இலட்சியத்தையோ அந்த அமைப்பையே அழித்து விடமுடியாது,நினைவு கூறும் தினத்தில் அவர்கள் விட்டு சென்ற இலட்சிய கனவுகளோடு ஒரு அர்த்தம் உள்ள அரசியல் தீர்வை நோக்கி ரெலோ பயணிக்கும்.

1969 களில் தங்கதுரை மற்றும் குட்டிமணி மற்றும் சில நண்பர்கள் யாழ்ப்பாணத்தில் ஒன்று கூடி தமிழ் ஈழ இயக்கம் (TLO) என்று பெயரிட விரும்பி ஒரு குழுவை உருவாக்கினர். யாழ்ப்பாணத்தில் பருத்தித்துறையில் உள்ள ஒரு கல்லூரிப் பேராசிரியரின் வீடு இந்தக் குழுவின் வழக்கமான சந்திப்பாக இருந்தது. இதில் பெரிய (பெரிய) சோதி, சின்ன (சிறிய) சோதி, செட்டி, கண்ணாடி (ரேடியோ மெக்கானிக்), ஸ்ரீ சபாரத்தினம் ஆகியோர் அடங்குவர். பின்னர் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (TELO) ஆனது.

1981 ஆம் ஆண்டில் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் உட்படப் பலர் இலங்கைக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

1983ஆம் ஆண்டு கறுப்பு ஜுலையின் போது வெலிக்கடை சிறைச்சாலையில் வைத்து,தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) முக்கியஸ்தர்களான தங்கத்துரை மற்றும் குட்டிமணி, ஜெகன் உள்ளிட்ட 53 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.