தமிழ் ஈழ விடுதலை இயக்கம் பிரித்தானியாவின் இலங்கைக்கான தூதுவர் சாரா ஹல்டன் அவர்களுடன் உத்தியோக பூர்வமான சந்திப்பினை இன்று மேற்கொண்டது

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) பிரித்தானியாவின் இலங்கைக்கான தூதுவர் சாரா ஹல்டன் அவர்களுடன் உத்தியோக பூர்வமான சந்திப்பினை இன்று 06/04/21 மேற்கொண்டது. மிக அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது எனக் கருதப்படும் இச்சந்திப்பில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், செயலாளர் நாயகம் கருணாகரம் மற்றும்  ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் கலந்து கொண்டனர். ஐ நா விடயங்கள், அரசியல் தீர்வு, மாகாணசபை தேர்தல்கள், நில அபகரிப்பு, இளையோர் மற்றும் பெண்கள் பங்களிப்பு, அபிவிருத்தி ஆகிய பல்வேறு விடயங்கள் சம்பந்தமாக நடந்த பேச்சுக்கள் இரண்டு மணி நேரம் நடைபெற்றது.