திருமலையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்! இந்தியா – இலங்கை பேச்சு

திருகோணமலை துறைமுகத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக லங்கா ஐ. ஓ. சி. நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார். இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் – லங்கா திருகோணமலை துறைமுகத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக லங்கா ஐ. ஓ. சி. நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற் றோலிய கூட்டுத் தாபனம் – லங்கா ஐ. ஓ. சி. இணைந்து நடத்தும் ட்ரிங்கோ பெற் றோலியம் ரேர்மினல் லிமிட்ரெட் நிறுவனத்தில் 51 சதவீத பங்குகள் இந்திய நிறுவனத்துக்கு உரியதாகும். திருகோணமலை துறைமுகத்தில் உள்ள இரண்டாம் போர் காலத்தில் அமைக்கப்பட்ட 51 எண்ணெய் குதங்களை இந்த நிறுவனம் கட்டுப்படுத்துகிறது. இந்த எண்ணெய் குதங்களை விரைவாக திருத்தியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 10 எண்ணெய் குதங்களை 2 கோடி அமெரிக் டொலர் செலவில் உடனடியாக திருத்தியமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதேபோல, மீதமுள்ள எண்ணெய் குதங்களை 5 கோடி டொலர் செலவில் திருத்தியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.