தேர்தல் நடத்தினால் பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடையும் – பிரசன்ன ரணதுங்க

தேர்தலை நடத்தினால் பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடையும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கட்சி என்ற ரீதியில் தேர்தலுக்கு தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், நாடு என்ற ரீதியில் தேர்தலுக்கு தயாராக இருக்கிறோமா என்பது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறுகிய அரசியல் நோக்கங்களை அடிப்படையாக கொண்டு செயற்படும் நிலை தற்போது கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார்.

தற்போதை வாழ்க்கை செலவுக்கு அமைய தேர்தல் ஒன்றை நடத்த குறைந்தது 20 பில்லியன் ரூபாவிற்கும் அதிக நிதி செலவாகும் என்பதை எதிர்க்கட்சியினர் நன்கு அறிவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல, இருப்பினும் தங்களின் குறுகிய அரசியல் நோக்கத்திற்காக தேர்தலை நடத்துமாறு வலியுறுத்துகிறார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலை நடத்துவதால் ஒன்றும் மாற்றமடைய போவதில்லை எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.