நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு மனோ கணேசன் கூட்டணி ஆதரவு

வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு தமிழ் முற்போக்குக் கூட்டணி தீர்மானித்துள்ளது.

இந்த விடயத்தை தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

இதன்படி தமிழ் முற்போக்குக் கூட்டணி எம்.பிக்களான மனோ கணேசன், வே.இராதாகிருஷ்ணன், ப.திகாம்பரம், எம்.வேலுகுமார், எம்.உதயகுமார் ஆகியோர் நாளை பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளனர்.

நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது இன்று விவாதம் ஆரம்பமானது. நாளை மாலை வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.