நான்கு நாடுகளில் இருந்து இஸ்லாமிய மத போதகர்கள் இலங்கைக்குள் நுளைவதற்குத் தடை

பாகிஸ்தான், கட்டார், குவைத் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் இருந்து இஸ்லாமிய மத போதகர்கள் இலங்கை வருவதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளதாக தெரியவருகிறது.

இந்த நாடுகளில் இருந்து இலங்கைக்கு மத போதகர்களை வரவழைத்த 32 இஸ்லாமிய அமைப்புகள் தொடர்பாக அரச புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த 2005ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 1800 இஸ்லாமிய மத போதகர்கள் இலங்கைக்கு வந்துள்ளதாக அரசாங்கம் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவர்கள் பேருவளை, அக்கரைபற்று, காத்தான்குடி, மாதம்பை, மூதூர் ஆகிய பிரதேசங்களுக்கு சென்று மத போதனைகளை நடத்தியுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் கண்டறிந்துள்ளதாக தெரியவிக்கப்படுகிறது.