நினைவுகூருவதற்கான தமிழர்களின் உரிமைகளை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் மீறிவருகின்றது – ஜஸ்மின் சூக்கா

வீரர் தினநிகழ்வுகளில் கலந்துகொள்பவர்களை அரசதரப்பினர் படமெடுப்பதை தடுப்பதற்காக சர்வதேச சமூகம் தனது கண்காணிப்பாளர்களை அந்த பகுதிக்கு அனுப்பவேண்டும் என உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச திட்டத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா வேண்டுகோள் விடுத்துள்ளார்

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

2009 மே மாதம் முடிவிற்கு வந்த உள்நாட்டு யுத்தத்தின் போது இழைக்கப்பட்ட யுத்த குற்றங்கள் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களிற்கு காரணமானவர்களை எந்த வகை பொறுப்புக்கூறலிற்கும் உட்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் தோல்வியடைந்துள்ளமை இலங்கையில் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுவதை ஆழமாக்கியுள்ளது.

யுத்தம் முடிவிற்கு வந்திருக்கலாம் ஆனால் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் தமிழர்கள் ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்படுவது தொடர்கின்றது.

பாதுகாப்பு படையினர் தொடர்ந்தும் இழைத்துவரும் வன்முறைகள் தனிநபர்களையும் குடும்பங்களையும் பாதிப்பதுடன் மாத்திரமல்லாமல் கூட்டுசகவாழ் நம்பிக்கை பாரம்பரியம் போன்றன கட்டி எழுப்பப்படும் சமூககட்டுமானத்தையும் அழிக்கின்றது.

விடுதலைக்கான தமிழர்களின் போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கான குடும்பங்களின் நியாயபூர்வமான உரிமைகளை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் மீறிவருகின்றது.

2014ம் ஆண்டு முதல் பலவருடங்களாக எனது அமைப்பு இலங்கையில் சித்திரவதைகளுக்கு உள்ளாகி அங்கிருந்து தப்பியோடியவர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளது – இதன் போது அவர்கள் நினைவேந்தலில் கலந்துகொண்டவேளை அவர்களை படமெடுத்த இலங்கையின் புலனாய்வு பிரிவினர் பின்னர் அவர்களிற்கு வீடுகளுக்கு சென்று அவர்கள் அச்சுறுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.

நாங்கள் சந்தித்த ஒருவர் 2022 நவம்பர் ஏழாம் திகதி வடபகுதியில் மயானத்தில் உரையாற்றியுள்ளார்- புதிய ஜனாதிபதி அவ்வாறான நிகழ்வுகளிற்கு அனுமதியளித்துள்ளதால் அவ்வாறான நிகழ்வுகளில் கலந்துகொள்வது பாதுகாப்பானது என அவர் கருதியுள்ளார்,

எனினும் சில நாட்களின் பின்னர் அவரது கருத்துசுதந்திரம் நடமாடும் சுதந்திரம் ஆகியவற்றை மீறும் விதத்தில் அவரை கைது செய்து சித்திரவதை செய்துள்ளனர் அவர் தனது புதிதாக பிறந்த குழந்தையையும் வளர்ச்சியடைந்து வந்த வர்த்தகத்தையும் விட்டு இலங்கையிலிருந்து தப்பிவெளியேறியுள்ளார்.

இவ்வாறான விசாரணைகளின் போது பாதுகாப்பு படையினர் இந்த நினைவுகூரல்களிற்கு யார் வழங்குவது என கேள்வி கேட்கின்றனர் –

நினைவேந்தல்களை ஏற்பாடு செய்வதும் கலந்துகொள்வதும் வெறும் எதிர்ப்பின் செயற்பாடுகள் மட்டுமல்ல இந்த பயங்கரமான போரில் தப்பிய அனைவராலும் உணரப்பட்ட மிக ஆழமான தனிப்பட்ட துரயத்தின் வெளிப்பாடுகள் ஆகும்.

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வன்முறைக்கு பலியானவர்களின் குடும்பத்தவர்களும் வன்முறைக்கு பலியானவர்களே மேலும் அவர்கள் காணாமல்போதல் சித்திரவதை அல்லது தங்கள் அன்புக்குரியவர்களின் இழப்பு போன்றவற்றை அனுபவித்தவர்கள்.

அவர்கள் உயிர்பிழைத்துள்ள போதிலும் தண்டனையின்மை மற்றும் குற்ற உணர்ச்சியின் பெரும் தடையை எதிர்கொள்கின்றனர்.

உயிர்பிழைத்தவர்கள் உண்மை மற்றும் நீதிக்கான அவர்களது போராட்டத்தில் இறந்தவர்களையும் காணாமல்போனவர்களையும் தொடர்ந்தும் நினைவுநினைவு கூருவது ஒரு தார்மீக மற்றும் சமூக பொறுப்பு என கருதுகின்றனர்.

நவம்பர் 27 ம் திகதி குடும்பத்தவர்கள் மற்றும் நண்பர்களை இழந்தவர்கள் மாத்திரம் அவர்களை நினைவுநினைவு கூருவதில்லை,மாறாக முழுசமூகமும் தியாகத்தையும் கூட்டுதுயரத்தையும் நினைவுகூருகின்றது.

பல ஆண்டுகளாக வெளிநாடுகளில் தப்பிப்பிழைத்த தமிழர்களின் குழுக்கள் இறந்தவர்களை தனிப்பட்ட மற்றும் பொது இடங்களில் நினைவுகூரும் உரிமையை மீட்டெடுப்பதை நாம் காண்கிறோம். செயல்பாட்டில் அவர்கள் உயிர்வாழ்வது மற்றும் சாட்சியமளிப்பதன் அர்த்தம் என்ன என்று போராடுகிறார்கள். வருங்கால சந்ததியினருக்கு நினைவாற்றலை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்காக அவர்கள் தங்கள் தனிப்பட்ட துன்பங்களை மட்டுமல்ல தங்கள் சமூகங்களின் துன்பங்களையும் வெளிப்படுத்த புதிய வழிகளைக் காண்கிறார்கள்.

எந்த அடக்குமுறையும் நினைவுநினைவு கூருவதற்கான மக்களின் தேவையை தடுத்து நிறுத்தப்போவதில்லை ,குறிப்பாக அது உங்களின் குழந்தை அல்லது பெற்றோருக்கானதாகயிருந்தால்.

சித்திரவதையிலிருந்து உயிர்தப்பிய ஒருவர் பூசாவில் தடுத்துவைக்கப்பட்டிருந்தவேளை தானும் தனது நண்பர்களும் நவம்பர் 27 ம் திகதி மெழுகுதிரியை ஏற்றுவதற்காக அதிகாலையில் எழுந்ததை நினைகூர்ந்திருந்தார்.

சிறைப்பாதுகாவலர்கள் பழிவாங்குவார்கள் என தெரிந்திருந்தும் அவர்கள் அதனை செய்தனர்.

அவர்களுக்கு உள்ள இறுதிகௌரவம் அதுவே அது மிகவும் பெருமதியானது.

போரிலிருந்து உயிர்பிழைத்தவர்கள் நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்துகொள்ளும்போது துக்கத்தை வெளிப்படுத்தி காயங்களை ஆற்ற முடியாத நிலையில் காணப்படுகின்ற சூழலில் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க உண்மையை கண்டறியும் ஆணைகுழுவை நிறுவது பற்றி பேசுகின்றார்.

உயிர்பிழைத்தவர்கள் அந்த ஆணைக்குழுவிடம் சென்று சாட்சியமளிக்கப்போவதில்லை.

உண்மை ஆணைக்குழு நம்பிக்கை மிக்கதாக காணப்படவேண்டும் வெற்றியளிக்கவேண்டும் என்றால் ஜனாதிபதி அரசவன்முறைகள் முடிவிற்கு வரும் என்பதையும் நவம்பர் 27 ம் திகதி நிகழ்வுகள் கண்காணிக்கப்படாது என்பதையும் அதில் கலந்துகொள்பவர்கள் அவற்றை ஏற்பாடு செய்தவர்கள் பழிவாங்கப்படமாட்டார்கள் என்பதையும் உறுதி செய்யவேண்டும்.

இந்த ஒடுக்குமுறைகள் இடம்பெறுகின்ற வேளை சர்வதேச சமூகம் அமைதியாகயிருக்ககூடாது சீருடை அணியாதவர்கள் படங்களை எடுப்பதை உறுதி செய்வதற்காக சர்வதேச கண்காணிப்பாளர்களை அனுப்பவேண்டும் எனஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.