இன்று பிற்பகல் (05-04-2021) திருகோணமலை நிலாவெளி கைலேஸ்வராக் கல்லூரியில் தெரிவு செய்யப்பட்ட பயனாளி மாணவிகளுக்கு வெள்ளிக் கிழமைகளில் அணிந்து வருவதற்காக கலாச்சாரச் சீருடைகள்
திருகோணமலை மாவட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்க (ரெலோ) அமைப்பினரால் வழங்கிவைக்கப்பட்டது.
இதற்கான நிதி உதவி 22 000 ரூபாய் தமிழ் ஈழ விடுதலை இயக்க பிரித்தானிய கிளையின் உறுப்பினர்,ரெலோ ஆரம்பகால உறுப்பினர் கந்தளாயைச் சேர்ந்த குட்டி அண்ணன் அவர்களின் பிள்ளைகளால் அன்பளிப்புச் செய்யப்பட்டது.
இதற்காக திருகோணமலை மாவட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கம் அவர்களிடத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
இதில் ரெலோ நிர்வாக செயலாளர் நித்தி மாஸ்டர், மற்றும் தமிழ் ஈழ விடுதலை இயக்க மாவட்ட உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் பங்பேற்றிருந்தனர்.