யாழ். கல்வி வலய பாடசாலைகளுக்கான விசேட விடுமுறை நீடிப்பு

யாழ். கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கான விசேட விடுமுறை மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

யாழ். கல்வி வலய பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்றைய தினம் (05) மீள ஆரம்பிக்கப்படவிருந்த போதிலும், எதிர்வரும் 09 ஆம் திகதி முதலாம் தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளதை கருத்திற்கொண்டு விடுமுறை நீடிக்கப்பட்டதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் கூறினார்.

கொரோனா வைரஸ் தொற்று நிலைமை காரணமாக யாழ். கல்வி வலய பாடசலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே, யாழ். மாவட்டத்தில் நேற்றைய தினம் (03) 07 பேருக்கு COVID – 19 தொற்று உறுதி செய்யப்பட்டதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.