பாராளுமன்றத்தில் சுயாதீன எம்.பியானார் சம்பிக்க!

சுயாதீன எம்.பியாக இயங்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் அவர் இன்று அதனை அறிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினரான தான் இனி சுயாதீன எம்.பியாகவே இயங்குவேன் என்று அவர் அதன்போது கூறியுள்ளார்.

இதேவேளை தனக்கு அரசாங்கத்தில் இணைந்து அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்ள வேண்டிய எண்ணம் இல்லை என்றும், அது தொடர்பில் வெளியாகும் செய்திகளின் உண்மையில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.