பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இருவர் பதவி விலகினர்

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினைச் சேர்ந்த மொஹான் சமரநாயக்க மற்றும் பி.கே.யு.ஏ விக்ரமசிங்க ஆகியோர் தங்களது பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இருவரும் தங்களது  இராஜினாமா கடிதங்களை நிதி அமைச்சின் செயலாளரிடம் கையளித்துள்ளனர்.