பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்க இடமளிக்கப்போவதில்லை – அத்துரலிய ரத்ன தேரர்

பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்க இடமளிக்கப்போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளராகி வெற்றிபெறுவதை இலக்காகக் கொண்டே வடக்கு, கிழக்கில் காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் ஜனாதிபதி கருத்துக்களை கூறுகின்றார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் எந்த வகையிலும் அவ்வாறான அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்குவதற்கு தாம் இடமளிக்கப்போவதில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன குறிப்பிட்டுள்ளார்.