மத்தள விமான நிலையத்தை இந்திய-ரஷ்ய தனியார் நிறுவனங்கள் கூட்டு முயற்சியில் நிர்வகிக்க இணக்கம்

மத்தள விமான நிலையத்தை இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் தனியார் கூட்டு முயற்சியுடன் ஒழுங்குப்படுத்துவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இதற்கான யோசனை எதிர்வரும் வாரம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் என துறைமுகம்,கப்பற்றுறை மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் நிறுவனங்கள் கூட்டிணைந்து மத்தள விமான நிலையத்தின் ஒழுங்குப்படுத்தல் பணிகளை முன்னெடுக்கவுள்ளதாக துறைமுகம்,கப்பற்றுறை மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ்.ருவன்சந்திர குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

மத்தள விமான நிலையத்தின் அபிவிருத்தி மற்றும் ஒழுங்குப்படுத்தல் பணிகளை முன்னெடுப்பதற்கு இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் தனியார் நிறுவனங்கள் முன்னிலையாகியுள்ளன.

இந்த நிறுவனங்களின் முகாமைத்துவத்துடன் பலமுறை மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களை தொடர்ந்து இந்த தீர்மானம எடுக்கப்பட்டதுடன்,கலந்துரையாடல் வெற்றிப்பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன் இந்தியா- ரஸ்யா கூட்டு ஒழுங்குப்படுத்தல் ஊடாக கிடைக்கப் பெறும் இலாபத்தின் ஒரு பகுதியை இலங்கைக்கு பெற்றுக்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.

மத்தள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தை நிர்மாணிப்பதற்காக 247.7மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன.

முத்த மத்தள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தை நிர்மாணிப்பதற்கு 247.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன.

அரசாங்கத்தின் நிதியை கொண்டு அபிவிருத்தி நிர்மாண பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் வெளிநாட்டு நன்கொடைகள் ஏதும் இந்த அபிவிருத்தி திட்டத்துக்கு கிடைக்கப்பெறவில்லை.

எனினும் சீனாவின் எக்ஸிம் வங்கி மாத்திரம் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை சலுகைக் கடனாக வழங்கியிருந்தது.

2017 முதல்வரை ஒவ்வொரு வருடமும் இரண்டு பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது. 2017,2018,2019,2020 ஆம் ஆண்டுகளில் இரண்டு பில்லியன் நட்டம் ஏற்பட்டாலும் 2021 ஆம் ஆண்டு சற்று முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.

எனினும் இந்த வருடத்தில் அந்த நட்டம் 1.1 பில்லியனாக குறைவடைந்துள்ள துறைமுகம்,கப்பற்றுறை மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா கடந்த நவம்பர் மாதம் பாராளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தார்.

மத்தள விமான நிலையத்தில் இருந்து கிடைக்கப்பெறும் வருமானத்தை காட்டிலும் அதனை நிர்வகிப்பதற்கு அதிக நிதி செலவிடப்படுகிறதால் மத்தள விமான நிலையத்தை ஒப்பந்த அடிப்படையில் தனியார் மயப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.