மனித உரிமை ஆர்வலர்களை தண்டிப்பது பிரச்சினைக்கு தீர்வை கொண்டுவராது – சர்வதேச அமைப்பு

மனித உரிமை ஆர்வலர்களை தண்டிப்பதும் அவர்களிற்கு தீங்கிழைப்பதும் அவர்களை தொடர்ந்தும் தடுத்துவைத்திருப்பதற்காக பல வழக்குகளை தாக்கல் செய்வதும் நெருக்கடிக்கான தீர்வில்லை என தெரிவித்துள்ள டப்ளிளை தளமாக புரொன்ட்லைன் டிபென்டர்ஸ் அமைப்பு

அனைத்து பல்கலைகழக பிக்குமார் ஒன்றிய ஏற்பாட்டாளர் கல்வேவ ஸ்ரீதம்ம தேரர் கைதுசெய்யப்பட்டு தடுப்புக்காவலில்வைக்கப்பட்டுள்ளதையும் தொடர்ந்து சிறையில் வைக்கப்பட்டுள்ளதையும் கண்டிப்பதாக புரொன்ட்லைன் டிபென்டர்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

தேசிய மற்றும் சர்வதேச கடப்பாடுகளின் அடிப்படையில் ஆர்ப்பாட்டங்களிற்கான உரிமை உறுதிப்படுத்தப்படவேண்டும் என சர்வதேச அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

மாணவ தலைவர்கள் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்களிற்கு எதிராக சட்டரீதியான தடைகளையும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களையும் பயன்படுத்துவது மனித உரிமைகள் மற்றும் அமைதியாக அதிருப்தியை வெளியிடுவதற்கான உரிமை குறித்த இலங்கையின் வாக்குறுதிகளிற்கு முரணாண விடயம் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவது குறித்து இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு ஆகஸ்ட் 22ம் திகதி பகிரங்க அறிக்கையொன்றில் கரிசனை வெளியிட்டிருந்தது,இலங்கையின் அரசியல் பொருளாதார அமைதியின்மைக்கு ஆக்கபூர்வமான தீர்வை காண்பதற்கு மனித உரிமை ஆர்வலர்கள் முக்கியமானவர்கள் என மனித உரிமை ஆர்வலர்கள் பாதுகாப்பு தொடர்பான அமைப்பு தெரிவித்துள்ளது.

மனித உரிமை ஆர்வலர்களை தண்டிப்பதும் அவர்களிற்கு தீங்கிழைப்பதும் அவர்களை தொடர்ந்தும் தடுத்துவைத்திருப்பதற்காக பல வழக்குகளை தாக்கல் செய்வதும் நெருக்கடிக்கான தீர்வில்லை எனவும் புரொன்ட்லைன் டிபென்டர்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.