மன்னாரில் வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்டோரின் 38 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்டோரின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) மன்னாரில் இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) அலுவலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த நினைவேந்தல் நிகழ்வில் வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட தலைவர் தங்கதுரை, தளபதி குட்டிமணி, முன்னணிப் போராளிகளான ஜெகன், தேவன் உள்ளிட்ட 53 அரசியல் கைதிகளுக்கு இதன்போது அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினர்கள், அக்கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் செயலாளர் டானியல் வசந்தன், ஈ.பி.ஆர்.கட்சியின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.