வெலிக்கடை தியாகிகள் தினம் முல்லைத்தீவில் நினைவுகூரல்!

வெலிக்கடை சிறையில் உயிரிழந்த குட்டிமணி தங்கத்துரை உள்ளிட்டவர்களின் 38 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட ரெலோகட்சி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற இன அழிப்பை தொடர்ந்து ஜூலை 25, 27ஆம் திகதிகளில் வெலிக்கடை சிறச்சாலைக்குள் நடைபெற்ற படுகொலைகளில் உயிரிழந்த குட்டிமணி தங்கத்துரை உள்ளிட்ட 53 அரசியல் கைதிகள் படுகொலை செய்ததன் 38வது நினைவு தினம் நினைவிற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஏற்பாட்டில் 38வது கருப்பு ஜூலை , வெலிக்கடை படுகொலை நினைவுதினம் புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள மாவட்ட அலுவலகத்தில் நினைவிற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது உயிரிழந்தவர்களின் படத்திற்கு சுடர் ஏற்றி மலர்தூவி வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.

இதில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம்,முன்னால் வடமாகாணசபை உறுப்பினர் ஆ.புவனேஸ்வரன்,கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் க.விஜிந்தன், புதுக்குடியிருப்பு பிரதேச சபை உப தவிசாளர் க.ஜெனமேஜெயந் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்துள்ளார்கள்.